திமுகவில் இணைந்த இளம் வாக்காளர்கள்

கூத்தாநல்லூரில் இளம் வாக்காளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனர்.


கூத்தாநல்லூரில் இளம் வாக்காளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனர்.
17- ஆவது மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இளம் வாக்காளர்களை தங்கள் கட்சியில் சேர்க்க பல்வேறு கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கூத்தாநல்லூர் நகர திமுக அலுவலகத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில், 50- க்கும் மேற்பட்ட புதிய இளம் வாக்காளர்கள் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு பூண்டி கே. கலைவாணன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலாளர் எஸ்.எம். காதர்உசேன், அவைத் தலைவர் எஸ்.வி.பி. பக்கிரிசாமி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வீரா.தேசபந்து, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி சேகர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பி. சுந்தர், மாவட்ட பிரதிநிதி குமரேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்நாதன், நகர இளைஞரணிச் செயலாளர் எம். ரைசின் பைசல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com