திருவாரூர் அருகே உள்ள தப்ளாம்புலியூர் ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் பொலிவுறு வகுப்பு (ஸ்மார்ட் கிளாஸ்) தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் ஜெ. கனகராஜன் பங்கேற்று, பொலிவுறு வகுப்பைத் தொடங்கி வைத்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு, பின்னர் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டரி சங்கத் தலைவர் சாய் வெங்கட் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கே. சீத்தாராமன் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.