குடவாசல் அருகே மேலப்பாலையூர் அருள்மிகு ருக்மணி, சத்யபாமா உடனுறை வேணுகோபாலசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள மேலப்பாலையூரில் அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள், அருள்மிகு ருக்மணி, சத்யபாமா உடனுறை வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதைத்தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பூர்வாங்க பூஜைகள், கடந்த புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கின.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மஹா பூர்ணாஹுதியுடன் 6 -ஆம் கால பூஜைகள் முடிவடைந்தன. பின்னர் கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோயிலின் விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.