2-ஆம் நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை

மக்களவைத் தேர்தலையொட்டி, மனுதாக்கல் செய்வதற்கு 2-ஆம் நாளான புதன்கிழமை யாரும் மனுதாக்கல் செய்ய முன்வரவில்லை.

மக்களவைத் தேர்தலையொட்டி, மனுதாக்கல் செய்வதற்கு 2-ஆம் நாளான புதன்கிழமை யாரும் மனுதாக்கல் செய்ய முன்வரவில்லை.
17-ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலோடு, திருவாரூர் சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. 
இதையொட்டி, வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் சுயேச்சை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். 2-ஆம் நாளான புதன்கிழமை யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.
திருவாரூர் சட்டப் பேரவை தேர்தலுக்காக, கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 28 மனுக்களும், நாகை மக்களவைத் தேர்தலுக்க்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 15 மனுக்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com