மக்களவைத் தேர்தலையொட்டி, மனுதாக்கல் செய்வதற்கு 2-ஆம் நாளான புதன்கிழமை யாரும் மனுதாக்கல் செய்ய முன்வரவில்லை.
17-ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலோடு, திருவாரூர் சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதையொட்டி, வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் சுயேச்சை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். 2-ஆம் நாளான புதன்கிழமை யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.
திருவாரூர் சட்டப் பேரவை தேர்தலுக்காக, கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 28 மனுக்களும், நாகை மக்களவைத் தேர்தலுக்க்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 15 மனுக்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.