ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

திருவாரூரில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்கம் சார்பில் 

திருவாரூரில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் எம். தங்கராசு தலைமை வகித்தார். மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கோ. சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். தேவக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி, சங்க மாநிலத் தலைவர் ஆ. பீட்டர் ராஜா, மாநிலப் பொதுச் செயலர் நா. ராஜூ, மாநிலப் பொருளாளர் பொ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். 
ஓய்வுபெறும் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து, மன்னார்குடி மாவட்டக் கல்வி அலுவலர் இரா. விஜயா, அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மு. இளஞ்செழியன், தா. வேதரெத்தினம், கே. தனபால், டி. சண்முகவேல், க. முருகையன், எஸ். வியாகுலமேரி, ப. ராஜேந்திரன், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற எம். தங்கராசு, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற எம். ரவி ஆகியோர் பாராட்டு பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com