நீடாமங்கலம் திரௌபதியம்மன் கோயிலில் நடைபெறும் தீமிதி பிரம்மோத்ஸவத்தையொட்டி, பக்தர்கள் புதன்கிழமை பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்டனர்.
இக்கோயிலில் 41-ஆம் ஆண்டு தீமிதி பிரம்மோத்ஸவம் கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கி, நடைபெற்றுவருகிறது. விழாவின் 10- ஆம் நாளான புதன்கிழமை, பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் நான்கு வீதிகளின் வழியாக கோயிலை அடைந்ததும் அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. பின்னர், மாலையில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.