தொழிற்சங்கங்கள் சார்பில் மே தினக் கொண்டாட்டம்

மே தினத்தையொட்டி, திருவாரூரில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டது. 

மே தினத்தையொட்டி, திருவாரூரில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டது. 
 விளமல் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் அருகே கொடியேற்றப்பட்டது. பின்னர், அங்கிருந்து திருவாரூரின் பல இடங்களில் மே தினத்தையொட்டி பிரசாரம் நடைபெற்றது. இறுதியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கூட்டுறவு பண்டகசாலை அலுவலகம் அருகே கொடியேற்றப்பட்டு, பிரசாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் துணைத் தலைவர் என். காளிமுத்து தலைமை வகித்தார். இதில் பொதுச் செயலர் கே. பாலதண்டாயுதம், உதவிப் பொதுச் செயலர்கள் வி. தர்மதாஸ், ஏ. குணசேகரன், உதவித் தலைவர் கே. ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டி பகுதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கொடியேற்றி மே தினம் கொண்டாடப்பட்டது.
திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். அரவிந்தனும், அரசு ஊழியர் சங்கம் சார்பில் கிளைத் தலைவர் சிவகுமார் தலைமையில் மாநில செயற்குழுஉறுப்பினர்  டி.மணிவண்ணனும் மே தினக் கொடியேற்றி வைத்தார்.
 அரசு போக்குவரத்துக் கழக கிளைஅலுவலகத்தில் சி.ஐ.டி.யு.  கிளை செயலர் மதியழகன் தலைமையில்  மாவட்டச் செயலர் எம்.பி.கே. பாண்டியன் , ஏ.ஐ.டி.யு. சி. சார்பில் கிளை நிர்வாகி நாகராஜன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன் ஆகியோர் கொடியேற்றினர்.
பாமணி அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் கிளைச் செயலர் புஷ்பநாதன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் ஆர். ஞானமோகன்,  திருத்துறைப்பூண்டி செங்கமலத்தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றியச் செயலர் அ. பாஸ்கர் ,  டாக்சி ஓட்டுனர் உரிமையாளர் சங்கம் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி. நகரச் செயலர்ஆர். வாசுதேவன், ரயில்வே கேட் பகுதி  சுமை வாகன உரிமையாளர் ஓட்டுநர் சங்கம் சார்பில் கிளைத் தலைவர் செல்வம் தலைமையில், ஒன்றிய ஏ.ஐ.டி.யு.சி. செயலர் சுரேஷ், பிச்சன்கோட்டகத்தில் ஒன்றிய விவசாயத் தொழிலாளர் சங்க செயலர் மகாலிங்கம், நெடும்பலத்தில் வழக்குரைஞர் எம். வையாபுரி, மணிலியில் இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் ஒன்றிய துணைச் செயலர் மணலி பாலு ஆகியோர்  தொழிற்சங்க கொடியேற்றி வைத்தனர். 
 திருத்துறைப்பூண்டியில் காந்தி அமைதி மையம் சார்பில் தட்டுரிக்ஷா மற்றும் தினக்கூலி உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி மே தினம் கொண்டாடப்பட்டது.
நன்னிலத்தில்...
நன்னிலம் வட்டத்தில் பல்வேறு கிராமங்களில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
திரூமீயச்சூர் கிராமத்தில் 6 இடத்திலும், பேரளத்தில் 3 இடங்களிலும், கொல்லுமாங்குடியில் 2 இடங்களிலும், கொல்லாபுரத்தில் 2 இடங்களிலும், பூந்தோட்டத்தில் 3 இடங்களிலும் மே தினக் கொடியேற்றப்பட்டது.
 சிஐடியு சார்பில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் நன்னிலம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி. வீரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் தியாகு ரஜினிகாந்த், சி ஐ டி யு சி மாவட்ட துணைச் செயலாளர் கே.எம். லிங்கம்,  வட்டக் குழு உறுப்பினர்கள் எம். ராமமூர்த்தி ஆர். சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் பகுதியில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மே தினம் கொண்டாடப்பட்டது.
தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மத்தியக் கிளை, மரக்கடைக் கிளை, வடக்குக் கிளை,தெற்குக் கிளை, நன்னிமங்கலம் உள்ளிட்ட கிளைகளில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் ஆர். சேகர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், நிர்வாகிகள் கே. மாரியப்பன், டீ. தர்மராஜ்,வி. ஆறுமுகம், ஆர். பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும். வாரியத்தில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்து, வாரிய பலன்களை உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டன.
இதேபோல், கூத்தாநல்லூர் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் ஊழியர் சங்கம் சார்பில், கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் எஸ். சின்னையன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் நா. பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். 
நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் கே. முனியாண்டி, கிளை நிர்வாகிகள் முருகேசன், சத்தியன், ரத்தினம், காமாட்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கூத்தாநல்லூர் நகராட்சி 1- ஆவது வார்டு கோரையாறு வடக்குத் தெருவில், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நகரச் செயலாளர் எம். சிவதாஸ் தலைமையில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கிளைச் செயலாளர் ஜெ. வரதராஜன், கிராம கமிட்டிச் செயலாளர் டி. தர்மராஜன், மாதர் சங்கத் தலைவி டி. விஜயகுமாரி, செயலாளர் ரமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தாநல்லூர் நகரச் செயலாளர் எம். சுதர்ஸன் தலைமையில், லெட்சுமாங்குடிப் பாலத்தில், மாவட்டக் குழு உறுப்பினர் பி. முருகேசன், கன்னையன், கே. நாகராஜன், ராமாமிர்தம், ஆட்டோ சங்கத் தலைவர் இளையராஜா, சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலையில் மே தினக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com