பாம்பு கடித்து பெண் சாவு
By DIN | Published On : 05th May 2019 01:32 AM | Last Updated : 05th May 2019 01:32 AM | அ+அ அ- |

திருவாரூர் அருகே பாம்பு கடித்து பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் அருகே கொரடாச்சேரி, நீலனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி செண்பகவள்ளி (55). இவர் வெள்ளிக்கிழமை பருத்தி வயலில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று இவரை கடித்து விட்டதாம். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் இவரை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செண்பகவள்ளி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...