உத்திராபதீஸ்வரர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா

கூத்தாநல்லூர் உத்திராபதீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புஷ்ப பல்லக்கில் உத்திராபதீஸ்வரர் வீதியுலா வந்தார்.

கூத்தாநல்லூர் உத்திராபதீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புஷ்ப பல்லக்கில் உத்திராபதீஸ்வரர் வீதியுலா வந்தார்.
லெட்சுமாங்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுதுபடையல் உத்ஸவத்தையடுத்து, ஏப்ரல் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நாளான அமுதுபடையல் நிகழ்ச்சி மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இரவு, 10.15 மணிக்கு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, புஷ்ப பல்லக்கில் உத்திராபதீஸ்வரர் அமர்த்தப்பட்டார். தொடர்ந்து, லெட்சுமாங்குடி கடைத்தெரு, கீழத்தெரு, மரக்கடை, வடக்குத் தெரு, அங்குள்ள குளத்தைச் சுற்றி மீண்டும் கீழத்தெரு, தெற்குத் தெரு, தாமரைக்குளம், திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக உத்திராபதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com