கூத்தாநல்லூர் உத்திராபதீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புஷ்ப பல்லக்கில் உத்திராபதீஸ்வரர் வீதியுலா வந்தார்.
லெட்சுமாங்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுதுபடையல் உத்ஸவத்தையடுத்து, ஏப்ரல் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நாளான அமுதுபடையல் நிகழ்ச்சி மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இரவு, 10.15 மணிக்கு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, புஷ்ப பல்லக்கில் உத்திராபதீஸ்வரர் அமர்த்தப்பட்டார். தொடர்ந்து, லெட்சுமாங்குடி கடைத்தெரு, கீழத்தெரு, மரக்கடை, வடக்குத் தெரு, அங்குள்ள குளத்தைச் சுற்றி மீண்டும் கீழத்தெரு, தெற்குத் தெரு, தாமரைக்குளம், திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக உத்திராபதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.