வலங்கைமான் வட்டம், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் அபயவரதராஜப் பெருமாள் சுவாமிக்கும், ஸ்ரீ தேவி பூமிதேவி தாயாருக்கும் சனிக்கிழமை (மே 18) இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
முன்னதாக, காலை 8.30 மணிக்கு கல்யாண லெட்சுமி நரசிம்மருக்கு தீபாராதனை பிரசாத விநியோகமும், மாலை 5.30 மணிக்கு சீர்வரிசை எடுத்து வருதல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பி. தமிழ்ச்செல்வி, தக்கார் மற்றும் ஆய்வர் சீ. தமிழ்மணி மற்றும் கோயில் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.