நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை (மே 29) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) வரை 5 நாள்கள் யோகா பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் நன்னிலம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் இம்முகாம் காலை 6 முதல் 8 மணி வரை நடைபெறும். இதில், பள்ளி மாணவர்கள் , பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். வயது வித்தியாசம் இன்றி, விருப்பம் உள்ள இருபாலரும் யோகா பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இப்பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.