நன்னிலத்தில் யோகா பயிற்சி முகாம் நாளை தொடக்கம்

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை (மே 29) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) வரை 5 நாள்கள் யோகா பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை (மே 29) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) வரை 5 நாள்கள் யோகா பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் நன்னிலம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் இம்முகாம் காலை 6 முதல் 8 மணி வரை நடைபெறும். இதில், பள்ளி மாணவர்கள் , பெற்றோர்கள் என  அனைவரும் கலந்து கொள்ளலாம். வயது வித்தியாசம் இன்றி, விருப்பம் உள்ள இருபாலரும் யோகா பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இப்பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com