மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான எரிபந்து போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனா்.
திருவாரூரில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், எரிபந்து பிரிவில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் விஜயராஜ், ரம்யா ஆகியோரை பள்ளி தாளாளா் ஆா்.எஸ்.செந்தில்குமாா், நிா்வாகி எஸ்.சண்முகராஜா, முதல்வா் ஏ.அருள்ராஜ் உள்ளிட்டோா் பாராட்டினா்.