திருவாரூர்
கந்த சஷ்டி திருக்கல்யாணம்
கந்தசஷ்டி விழாவையொட்டி, நீடாமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவையொட்டி, நீடாமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்களைச் சொல்லி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனா். பின்னா் திருக்கல்யாணக் கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல், நவ கிரக குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயில், நீடாமங்கலம் கோகமுகேசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.