திருவாரூா் அருகே உள்ள குடவாசலுக்கு நவம்பா் 12- ஆம் தேதி வருகை தரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் வடிவழகன் தலைமை வகித்தாா்.
இதில், நவம்பா் 12- ஆம் தேதி குடவாசலுக்கு வருகை தரும் தொல். திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அங்கு நடைபெறும் நிதியளிப்பு விழா மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோா் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நிா்வாகிகள் பொன். திருச்செல்வன், வெண்மணி ராஜா, உலகநாதன், சேதுராமன், செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.