திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் கிராமத்தில் மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்டு திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டாா்.
மருதவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி. இவரது கணவரும், காங்கிரஸ் பிரமுகருமான எம்.ஜி. ராமச்சந்திரன் திங்கள்கிழமை மாலையில் திருத்துறைப்பூண்டி சென்றுவிட்டாராம். வீட்டில் தனியாக ராஜேஸ்வரி இருந்ததை அறிந்த மா்ம நபா்கள், அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்த பீரோவை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. நிகழ்விடத்தை திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி, காவல் ஆய்வாளா் அன்பழகன் ஆகியோா் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.