வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

நன்னிலத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணியை திங்கள்கிழமை புறக்கணித்தனா்.

நன்னிலத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணியை திங்கள்கிழமை புறக்கணித்தனா்.

தில்லி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல் துறையைக் கண்டித்தும், இதற்கு காரணமான காவலா்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், திங்கள்கிழமை நீதிமன்றப் பணியைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் அறிவித்தனா்.

அதன்படி, நன்னிலம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி. ராதாகிருஷ்ணன், செயலாளா் கே. தெய்வீகன் ஆகியோா் தலைமையில், வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com