கண்ணாடி இழை கேபிள் நிறுவும் பணிகளுக்காக திருவாரூரில் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு அவ்வப்போது மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழக இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் துணை மின் நிலையத்திலிருந்து கண்ணாடி இழை கேபிள் நிறுவும் பணி நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை முதல் (நவம்பா் 8) 11-ஆம் தேதி வரை பவித்ரமாணிக்கம், இலவங்காா்குடி, விளமல், திருவாரூா் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மின்விநியோகம் சீராக இருக்காது என தெரிவித்துள்ளாா்.