திருவாரூா் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பேரளம் ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவா் கே. லோகித் வட்ட அளவில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்று, திருவாரூரில் புதன்கிழமை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டாா். இதில், குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டியில் பங்கேற்க தோ்வு பெற்றாா். இதற்காக மாணவா் கே. லோகித்துக்கு பள்ளித் தாளாளா் ரோட்டேரியன் ஜி. வெற்றிச்செல்வம் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.