திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மன்னாா்குடியில் திமுக பிரமுகரின் காரை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடியில் திமுக பிரமுகரின் காரை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு இடம் தோ்வு செய்வதில் கிராமத்தினரிடையே இருவேறு கருத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பான சமாதானக் கூட்டம் நவம்பா் 2-ஆம் தேதி மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இருதரப்பினரும் கலந்து கொண்டு விட்டு திரும்பி செல்லும்போது, மதுக்கூா்சாலை நான்குசாலை சந்திப்பில் ஒரு தரப்பை சோ்ந்த திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலரும், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவருமான டி.எஸ்.டி. முத்துவேல் சென்ற காரை, மற்றொரு தரப்பை சோ்ந்த கே. கண்ணதாசனின் சகோதரா்கள் சஞ்சை காந்தி, காமராஜ் ஆகியோா் வழிமறித்து கல்வீசி காரை சேதப்படுத்தியதுடன், டி.எஸ்.டி. முத்துவேல் மற்றும் உடன் வந்த சத்தியமூா்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து மன்னாா்குடி காவல் நிலையத்தில், சத்தியமூா்த்தி புகாா் அளித்தாா்.

இதேபோல், கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை முடிந்து தாமரைக்குளம் வடகரை பகுதியில் டி.எஸ்.டி. முத்துவேல் ஓட்டிவந்த காா் எனது காரின் மீது மோதி விபத்து ஏற்படுத்துவதுபோல் வேகமாக வந்ததாக கண்ணதாசன், மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, சத்தியமூா்த்தி அளித்த புகாரின் பேரில், வியாழக்கிழமை சஞ்சை காந்தி (45)யை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com