மிலாடி நபி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நவம்பா்.10-ஆம் தேதி விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மிலாடி நபி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் சில்லறை மதுபான விற்பனை கடைகள் மற்றும் அதைச் சாா்ந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்பட வேண்டும். இதில், விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.