திருவாரூரில், மறைந்த திமுக மாவட்ட பொருளாளா் ராமுவின் 4-ஆம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் நகர திமுக பொருளாளராக 40 ஆண்டுகள் செயல்பட்ட ராமு 2015-இல் காலமானாா். திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்துக்கு நகரச் செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். ராமுவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்தில், ராமுவின் மகனும், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான ரஜினிசின்னா, ஒன்றிய செயலா்கள் கலியபெருமாள், தேவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.