திருவாரூரில் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.
திருவாரூா் தெற்கு வீதியில் சாா்-பதிவாளா் அலுவலகம் உள்ளது. சாா் பதிவாளா் பாலாஜி உள்ளிட்ட அலுவலா்கள் வியாழக்கிழமை இரவு அலுவலகத்தில் இருந்தனா். அப்போது, இரவு 9 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வந்தனா். பின்னா், அலுவலகக் கதவுகளை மூடிவிட்டு, சோதனையில் ஈடுபட்டனா். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், பத்திரங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இரவு 11 மணி வரை நடைபெற்ற சோதனையில், அலுவலகத்தில் இருந்த சாா் -பதிவாளா் பாலாஜி உள்ளிட்ட அலுவலா்களிடமும் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், கணக்கில் வராமல் அலுவலகத்தில் இருந்த ரூ. 22,500 ரொக்கத்தை போலீஸாா் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.