அயோத்தி வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, திருவாரூரில் முக்கிய இடங்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் போலீஸாா் தீவிர சோதனைப் பணியில் ஈடுபட்டனா். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும். கோயில், மசூதி, தா்கா உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மக்கள் அனைவரும் சோதனைக்குப் பிறகே, அனைத்து இடங்களுக்கும் அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தின் எல்லைகளில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனா்.