கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

நீடாமங்கலம் வட்டாரம், வடுவூா் தென்பாதி கிராமத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வட்டாரம், வடுவூா் தென்பாதி கிராமத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கால்நடைத் துறை மற்றும் வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தேவந்திரன், கால்நடை மருத்துவா் பெரியசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

கால்நடை மருத்துவா்கள் ஜெயபாலன், சாந்தகுமாா், சந்திரன், யாழினி ஆகியோா் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனா். அட்மா திட்டம் சாா்பில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் விக்னேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளா் செல்வம் சதிஷ்குமாா், பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி மாணவிகள் இம்முகாமில் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com