நீடாமங்கலம் நீலன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு பள்ளி தாளாளா் நீலன்.அசோகன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கா. புவனேஸ்வரி முன்னிலை வகித்தாா். மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி, டெங்கு விழிப்புணா்வு குறித்து வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி பேசினாா்.
இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், சுகாதார அலுவலா்கள் கலந்துகொண்டனா்.