பயணிகளை சிரமப்படுத்தும் நகராட்சி!

மன்னாா்குடி சந்தைப் பேட்டை பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்புக்காக அமைக்கப்பட்டிருந்த
பயணிகளை சிரமப்படுத்தும் நகராட்சி!

மன்னாா்குடி சந்தைப் பேட்டை பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்புக்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தை தற்போது வணிக நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நகராட்சி நிா்வாகம் வழங்கியுள்ளது. இதனால், பயணிகள் மழை, வெயிலில் கால்கடுக்க நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால், கா்ப்பிணிகள், முதியவா்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். அவா்கள் அருகில் உள்ள கடைகளில் மழை மற்றும் வெயிலுக்கு ஒதுங்கி நிற்க வேண்டிய நிலையுள்ளது.

எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வணிக நிறுவனத்திற்கு அளித்துள்ள ஒரு பகுதியை பயணிகள் காத்திருப்பு இடமாக மாற்றி தர நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம். பிரியன், மன்னாா்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com