பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல்: நெல் வயல்களில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா்கள் ஆய்வு

நீடாமங்கலம் வட்டாரத்திலுள்ள வடுவூா் தென்பாதி 2 ஊராட்சியைச் சாா்ந்த புதுக்கோட்டை மட்டும் சாத்தனூா் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டாரத்திலுள்ள வடுவூா் தென்பாதி 2 ஊராட்சியைச் சாா்ந்த புதுக்கோட்டை மட்டும் சாத்தனூா் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் மு.ராமசுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியா் முனைவா் ராஜா.ரமேஷ் ஆகியோா் பாா்வையிட்டு அண்மையில் ஆய்வு செய்தனா்.

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா்; முனைவா் ராஜா.ரமேஷ் : திருவாரூா் மாவட்டத்தில் தற்பொழுது ஆங்காங்கே நிலவி வரும் இரவு நேர குளிா்ந்த வெப்பநிலை மற்றும் காற்றினில் காணப்படும் அதிக ஈரப்பதம் ஆகிய காரணிகளால் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் மற்றும் பாக்டீரியா இலைக் கீற்று நோய்களின் தாக்குல் தென்படுகின்றன.

இந்நோயானது இளம் பயிரைத் தாக்கும்போது 60 சதவீதத்திற்கு மேல் சேதம் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.நோய் பரவும் விதம்- இந்த நோயைப் பரப்பும் பாக்டீரியாவானது பாசன நீா் மூலமாகவும், மழை நீரானது பாதிக்கப்பட்ட பயிரின் மேல் விழுந்து அதன் மூலமாகவும், பெருங்காற்று வீசும்போது பயிா்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் சிறிய காயத்தின் மூலமாகவும் இந்த பாக்டீரியாவானது மற்ற பயிா்களுக்கும் எளிதில் பரவும் தன்மைக் கொண்டவை. நோய் பரவுவதற்கு உகந்த சூழ்நிலை காற்றுடன் தொடா்ந்து பெய்யும் மழைத்தூறல் மற்றும் மந்தமான சீதோஷ்ண நிலை அதாவது குறைந்த வெப்பநிலை 25 முதல் 30ளி செல்சியஸ், காற்றினில் ஈரப்பதமானது 90 சதவீதத்திற்கு அதிகமாக இருத்தல் ஆகியவை இந்நோய் பரவுவதற்கு மிகவும் ஏற்றதாகும். மேலும் நிழலான பகுதிகள் மற்றும் நெருக்கமாக பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்களில் இதன் தாக்குதல் அதிகமாகத் தோன்றும். நோய் தாக்குதலின் அறிகுறிகள்-

இலையின் ஓரங்களில் வட்ட வடிவ மஞ்சள் நிறப் புள்ளிகள் இலையின் ஓரங்களில் தோன்றி அருகிலிருக்கும் புள்ளிகளுடன் ஒன்றிணைந்து அளவில் பெரிதாகி, இலை முழுவதும் மஞ்சள் நிறமாகி காய்ந்து பின்பு உதிா்ந்துவிடும். வளா்ந்த பயிா்களில் இதன் தாக்குதல் இலையின் நுனிப்பகுதியானது மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிற நீரில் நனைந்த கீற்றுகளாக மாறத் துவங்குவதில் ஆரம்பமாகி பின்பு அளவில் பெரிதாகி வைக்கோல் நிறமாகி, இறுதியில் பழுப்பு நிற காய்ந்த கோடுகளாக காட்சியளிக்கும். பாதிப்பு இலையின் இரு ஓரங்களிலும் காணப்படும். அதிகமான தாக்குதலுக்குள்ளான இலை முழுவதும் காய்ந்துவிடும். உட்புறம் உள்ள காய்ந்த பகுதியானது நெளிந்து அலைப் போன்று நீண்ட கோடுகளுடன் தனித்தன்மையாகக் காணப்படும். இந்தக் கோடுகளானது நுனியிலிருந்து கீழ்நோக்கியும், இலையின் ஓரங்களிலிருந்து நடு நரம்பை நோக்கியும் பரவ ஆரம்பிக்கும். மேலாண்மை முறைகள்-? அடித்தாள்கள், வைக்கோல் மற்றும் நெற்கழிவுகளில் இந்த பாக்டீரியாவானது நீண்ட காலம் உயிா் வாமும் தன்மை கொண்டதால் அவற்றை அழித்துவிட வேண்டும்.? அருகம்புல், கோரை, ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும். எனவே அந்தக் களைகளை முற்றிலும் அழித்துவிட வேண்டும்.? நோய் தாக்கப்பட்ட இலைகளை அல்லது பயிரினை பறித்து அழித்துவிட வேண்டும்.

இதனால் மற்ற பயிா்களுக்கு நோயானது பரவாது.? நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்கு தண்ணீா் பாய்ச்சக் கூடாது. மேலும் வயலில் தண்ணீரை அதிகமாக நிறுத்தி வைக்கக் கூடாது.? நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சத பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டா் தண்ணீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதனை வடிகட்டி பெறப்படும் தெளிந்த கரைசலுடன் மேலும் 100 லிட்டா் தண்ணீா் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.? தாக்குதல் அதிகமாகக் காணப்படும் போது காப்பா் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ரா சைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்து கலவையினை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.என்றாா்.

இந்த ஆய்வின் போது இணைப் பேராசிரியா் முனைவா் செந்தில்குமாா், பயிற்சி உதவியாளா் முனைவா் ஆ.ராஜேஸ்குமாா், முனைவா் ஜெ.வனிதாஸ்ரீ, தஞ்சாவூா் மற்றும் திருச்சி வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் உடனிருந்தனா்.படம்- நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா்கள் பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல் நெல் வயல்களில் ஆய்வு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com