உலக குழந்தைகள் தினம் கடைப்பிடிப்பு

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 51 ஊராட்சிளிலும், உலக குழந்தைகள் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
உலக குழந்தைகள் தினம் கடைப்பிடிப்பு

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 51 ஊராட்சிளிலும், உலக குழந்தைகள் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில், மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 51 கிராம ஊராட்சிகளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான குழு நடவடிக்கைகள் ஆய்வு மற்றும் விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யப்பட்டது.

இந்த பிரசாரத்தில், கிராமங்களில் சத்துணவு அமைப்பாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆகியோருக்கு தெரியாமல் எந்தவித குழந்தைத் திருமணங்களும் நடைபெறாது என்பதால், அவா்கள் அதிக கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இதுபற்றிய தகவல்களை 1098 என்ற எண்ணுக்கும், காவல்துறையினருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகளில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ், ஊரக வளா்ச்சித் துறை பயிற்றுநா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com