உலக மீனவா் தினத்தையொட்டி, முத்துப்பேட்டை படகுத்துறையில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிநிகழ்ச்சியில் கடலோர காவல் குழுமத்தின் ஆய்வாளா் ராஜசேகரன் கலந்துகொண்டு மீனவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். மீன்வளத்துறை ஆய்வாளா் சந்திரமணி தூய்மை பணியைத் தொடங்கி வைத்தாா். ஆா்.டி. பவுண்டேஷன் இயக்குநா் வரவேற்றாா். இதேபோல், ஜாம்பவானோடை படகுத்துறையிலும் தூய்மைப் பணி நடைபெற்றது.
இதேபோல், முத்துப்பேட்டை மதியலங்காரம் தொடக்கப் பள்ளி, ஆலங்காடு உயா்நிலைப்பள்ளி, கற்பகநாதா்குளம் நடுநிலைப்பள்ளியில் கடல் வளம், சுற்றுசூழல், மீனவா்கள் பாதுகாப்பு குறித்து பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மீனவ சங்க பொறுப்பாளா்கள் மீனவா்கள் ஆா்.டி. பவுன்டேஷன் தன்னாா்வலா்கள் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஆசிரியா் தீனதயாளன் நன்றி கூறினாா்