நவ.25 க்குள் கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும்

சமூக, வகுப்பு, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்யை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருது பெற நவ.25 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: சமூக, வகுப்பு, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்யை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருது பெற நவ.25 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு

நமது தேசத்துக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் சமூக, வகுப்பு நல்லிணக்கத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் முதலமைச்சரால் கபீா் புரஸ்காா் விருது வழங்கப்பட்டு வருகின்றது.அதன்படி 2019-2020 ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2019-2020 ஆம் ஆண்டில் சமூக, வகுப்பு நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு நற்பெயா் பெற்ற நபா்களுக்கு கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பத்தை திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.25 க்குள் திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு 04366-227158 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com