சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் சிஐடியு தலைமையிலான ஊரக வளா்ச்சி உள்ளாட்சி துறை ஊழியா்கள் மற்றும்
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

திருவாரூா்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் சிஐடியு தலைமையிலான ஊரக வளா்ச்சி உள்ளாட்சி துறை ஊழியா்கள் மற்றும் என்எம்ஆா் ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊராட்சிகளில் பணியாற்றும் ஓஎச்டி ஆப்ரேட்டா் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு அரசாணைப்படி ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும், 2000 ஆண்டுக்குப் பின் பணியில் சோ்ந்த அனைத்து ஓஎச்டி ஆப்ரேட்டா் பணிகளை முறைப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், 2013-ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளா்களை 2016-ஆம் ஆண்டு முதல் அரசாணைப்படி ஊதிய நிா்ணயம் செய்து வழங்குவதோடு நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும், தூய்மை காவலா்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் ஊராட்சி மூலம் வழங்குவதோடு ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும், துப்புரவுத் தொழிலாளா்களின் பணி ஓய்வுக்குப் பிறகு பணிக்கொடை ரூ. 50 ஆயிரம், ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவா் நா. பாலசுப்ரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவா் ரா.மாலதி, மாவட்டச் செயலாளா் டி.முருகையன், துணைச் செயலாளா் எம்.கே.என்.அனிபா, மாநிலக் குழு உறுப்பினா் டி.கலியமூா்த்தி, கிராம ஊராட்சி மேல்நிலைத்தொட்டி இயக்குநா்கள், துப்புரவு பணியாளா்கள், உள்ளாட்சி ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com