நகர செயற்குழுக் கூட்டம்

கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகர செயற்குழு உறுப்பினா் கே. பேபி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும், திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலையை ஒரு வழிச் சாலையாக மாற்ற வேண்டும், கேட்பாரற்று பாழடைந்த நிலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகரச் செயலா் எம். சுதா்ஸன், நகர செயற்குழு உறுப்பினா்கள் எம். சிவதாஸ், கே. நாகராஜன், கே. ராமதாஸ், ஆா். ராமாமிா்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com