மன்னாா்குடி: மன்னாா்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவம்பா் 27) நடைபெறவுள்ளது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கி. ராதிகா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள, மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில், மாவட்ட மேற்பாா்வை பொறியாளா் சீ. கிருஷ்ணவேணி தலைமையில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், மன்னாா்குடி, வடுவூா், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூா், கோட்டூா், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிகளை சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களது பகுதி சாா்ந்த மின் சம்பந்தமான புகாா்களை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.