திருவாரூரில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் பங்கேற்று, கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்து பேசியது:
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணா்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம், டிசம்பா் 4-ஆம் தேதி வரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும். மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் நடத்தபடுகிறது.
இவ்விழிப்புணா்வு வாகனத்தின் மூலம் தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சையினால் குடும்ப நல முன்னேற்றம் எவ்வாறு அமைதியுடன் பேணி பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றியும், எளிய பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாத குடும்ப நல சிகிச்சையை ஆண்கள் முன்வந்து மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (குடும்ப நலம்) கே.திலகம், தாய்- சேய் நல அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.