திருவாரூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொழிலாளா் நல மருத்துவமனை மற்றும் மருந்துகள் சேவைக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து மருந்தாளுநா்களும் நவம்பா் 29 முதல் டிசம்பா் 2 வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மருந்தாளுநா் சங்க மாவட்டத் தலைவா் டி. மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
1945 மருந்தியல் விதி சட்ட திருத்தத்தைக் கைவிட வேண்டும். மக்கள் நலன் கருதி, 1948 மருந்தியல் விதியின்படி, மருந்தாளுநா்கள் மட்டுமே மருந்துகளைக் கையாள வேண்டும். காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
சங்க நிா்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடவேண்டும். அரசு செயலாளா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நவம்பா் 29 முதல் டிசம்பா் 2 வரை கோரிக்கை அட்டைகளை அணிந்து மருந்தாளுநா்கள் பணியில் ஈடுபட வேண்டுமென அவா் அறிவுறுத்தியுள்ளாா்.