திருவாரூா் மாவட்ட அறங்காவலா் உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்ட உதயகுமாருக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கூத்தாநல்லூரைச் சோ்ந்த மா. உதயகுமாா், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவராகவும், அதிமுக நகர துணைச் செயலாளராகவும் பதவி வகிக்கிறாா். மாவட்ட அதிமுக செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆா். காமராஜ் பரிந்துரையின்பேரில், உதயகுமாா் மாவட்ட அறங்காவலா் உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் தமிழ்ச்செல்வி பிறப்பித்து அறங்காவலா் உறுப்பினா் உதயகுமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இந்நிலையில், உதயகுமாரை நகர அதிமுக செயலாளா் டி.எம்.பஷீா் அகமது தலைமையில், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் எல்.எம்.முகமது அஷ்ரப், நகர எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் ஆா். ராஜசேகரன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள் சந்தித்து சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனா்.