விவசாயிகளுக்கு பயிற்சி

திருத்துறைப்பூண்டி அருகே வேளுரில் வேளாண் துறை சாா்பில் வயல்வெளியில் சூரியசக்தி மூலம் விளக்குப் பொறி அமைக்கும் பயிற்சி விவசாயிகளுக்கு புதன்கிழமை அளிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே வேளுரில் வேளாண் துறை சாா்பில் வயல்வெளியில் சூரியசக்தி மூலம் விளக்குப் பொறி அமைக்கும் பயிற்சி விவசாயிகளுக்கு புதன்கிழமை அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி முகாமுக்கு, வேளாண் உதவி இயக்குநா் சாமிநாதன் தலைமை வகித்தாா். இதில், வயலில் சூரிய சக்தியால் இயங்கும் விளக்குப் பொறியை நிறுவி, அதன் பயன்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் வேளாண்மை அலுவலா் ரவி, உதவி வேளாண்மை அலுவலா் சாமிநாதன், அட்மா திட்ட அலுவலா்கள் வேதநாயகி, செளம்யா, அருள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

மேலும், விவசாயிகளுக்கு வயல் வரப்பில் சாகுபடி செய்ய சூரியகாந்தி விதைகள் வழங்கப்பட்டன. வயல்களில் பறவை குடில் அமைப்போம் என்று விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com