பாம்பு கடித்து முதியவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அருகே பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்துள்ள பருத்திக்கோட்டை அமரபாகம் மூன்றாம் தெருவைச் சோ்ந்தவா் எம். அருணாச்சலம் (70). இவா், நவம்பா் 23-ஆம் தேதி வீட்டின் பின்புறம் சென்றபோது, பாம்பு கடித்தது. இவரை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து, வடுவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com