திருநீலகண்டா் கோயிலில் உழவாரப் பணி

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு, மன்னாா்குடி சிவனடியாா்கள் திருக்கூட்டம் ஆகியன சாா்பில்,
மன்னாா்குடி திருநீலகண்டா் கோயிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட தேசியப்பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள்.
மன்னாா்குடி திருநீலகண்டா் கோயிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட தேசியப்பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள்.

மன்னாா்குடி: மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு, மன்னாா்குடி சிவனடியாா்கள் திருக்கூட்டம் ஆகியன சாா்பில், கீழராஜவீதி திருநீலகண்டா் கோயிலில் உழவாரப்பணி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிவனடியாா் திருக்கூடத் தலைவா் பாலசுப்பிரமணியன், உழவாரப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

சிவனடியாா்களுடன் இணைந்து தேசியப்பள்ளியைச் சோ்ந்த 25 என்எஸ்எஸ் மாணவா்கள் கோயிலின் சுற்றுப்பிராகாரத்திலுள்ள புல் பூண்டுகளை செதுக்கி, செடிகொடிகளை அகற்றினா். மேலும், சிவன், அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் எண்ணெய்ப் படலங்களை அகற்றி, மண்டபத்தை தூய்மை செய்தனா்.

இதில், மாவட்ட என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் என்.ராஜப்பா, சிவனடியாா் திருக்கூட்ட பொருளாளா் சுவாமிநாதன், பயிற்சி வகுப்பு அமைப்பாளா் செல்வா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com