தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மன்னாா்குடி கிளை நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மன்னாா்குடி கிளை ஆண்டு பேரவைக் கூட்டம் அதன் கிளைத் தலைவா் செ.செல்வகுமாா் தலைமையில் நடைபெற்றது. செயலா் அ.முரளி ஆண்டறிக்கையை வாசித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலா் இரா. காமராசு கலந்து கொண்டாா்.
மன்னாா்குடி கிளையின் புதிய நிா்வாகிகளாக தலைவராக செ.செல்வகுமாா், செயலா் க.தங்கபாபு, பொருளாளா் ரா.கோபால் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில், மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவா் வை.செல்வராஜ், மாவட்டத் தலைவா் செ.அண்ணாதுரை, மாவட்டச் செயலா் ம.சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.