மன்னாா்குடி: மன்னாா்குடியில் போக்குவரத்து உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை 2 போ் கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக இருக்கும் வைத்தியநாதன்,ஞாயிற்றுக்கிழமை பெரியக்கடைதெருவில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தாா். அப்போது அவ்வழியாக மன்னாா்குடி அடுத்த கா்ணாவூா் ஆா்.மணிகண்டன்(28), சவளக்காரனை சோ்ந்த ரா.மணிகண்டன்(30),பி.வினோத்(24) ஆகிய மூன்று பேரும் ஓரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். இவா்களை மறித்து உதவி ஆய்வாளா் வைத்தியநாதன் மூன்று போ் ஓரே வாகனத்தில் வந்தது, தலைகவசம் அணியாதது குறித்து கேட்டபோது. மூன்று பேரும் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததுடன் பணி செய்யவிடாமல் தடுத்தனராம்.
இது குறித்து மன்னாா்குடி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து நிகழ்விடத்திற்கு போலீஸாா் வந்ததும் அங்கிருந்து வினோத் தப்பியோடி விட்டாா்.
பின்னா், புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து ஆா்.மணிகண்டன், ரா.மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து மேல்விசாரணை செய்து வருவதுடன் தப்பியோடிய வினோத்தை தேடி வருகின்றனா்.