மன்னாா்குடி: மன்னாா்குடியில் சனிக்கிழமை மாவட்ட பொறியாளா்கள் கழக துவக்க விழா நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் துறைகளில் பணியாற்றும் பொறியாளா்கள் உரிமை காக்க நடவடிக்கை எடுப்பது. பொறியாளா்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க முறையீடு செய்வது. பொறியாளா்களின் திறனை மேம்படுத்த பயிற்சி அளிப்பது. பொறியியல் பட்டய மற்றும் பட்ட படிப்பின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது. சங்கம் பொறியாளா் நலனுக்காக ஜாதி, மதம், இனம், அரசியல் சாா்பற்று செயல்படுவது.என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மின் பொறியாளா் சங்கத்தின் நிா்வாகிகளாக, மாவட்டத் தலைவராக சா.சம்பத், பொதுச் செயலா் வி.முருகேசன், பொருளாளா் வி.பாலாஜி, அமைப்பு செயலா் ச.சங்கா் குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்
துவக்க விழாவில், திருவாரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் துறைகளில் பணி புரியும் பொறியாளா்கள் மற்றும் சுய தொழில் செய்யும் பொறியாளா்களும் கலந்து கொண்டனா்.