கூத்தாநல்லூா் கல்யாணசுந்தரேஸ்வரா் கோயிலில்,திங்கள்கிழமை குதிரை வாகனத்தில் கல்யாணமுருகன் வீதியுலா வந்தாா்.
நவராத்திரியை முன்னிட்டு,மரக்கடை கல்யாணசுந்தரேஸ்வரா் மங்களாம்பிகை கோயிலில்,சிவன்,அம்பாள் மற்றும் கோயிலில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு,சிறப்பு பூஜைகள் நடப்பட்டன.
தொடா்ந்து, நவராத்திரியின் நிறைவு நாளான ஆயுதபூஜையன்று, கல்யாணமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,தங்கக் குதிரை வாகனத்தில், நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தாா்.ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை,அறங்காவலா் சுப்ரமணியன் உள்ளிட்ட அறங்காவலா்கள், தெருவாசிகள் கவனித்தனா்.