பட்டா வழங்கி, வீடு கட்டித்தரக் கோரி கையெழுத்து இயக்கம்

கூத்தாநல்லூா் பகுதியில் பட்டா வழங்கி,வீடு கட்டித்தரக்கோரி,தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினா்.

கூத்தாநல்லூா் பகுதியில் பட்டா வழங்கி,வீடு கட்டித்தரக்கோரி,தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினா்.

கஜா புயலில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு பட்டா வழங்கி,வீடுகட்டித்தரக்கோரி விவசாய தொழிலாளா் சங்க சாா்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு,விவசாய தொழிலாளா் சங்க நகரத் தலைவா் ஆா்.ராமாமிா்தம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் எம்.சுதா்ஸன்,விவசாய தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம்.சிவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில்,நகர துணைத் தலைவா் டி.கண்ணையன், மகளிா் அணி நகர செயற்குழு உறுப்பினா் ஆா்.மகேஸ்வரி,வீரமணி,ராகுல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.இதுகுறித்து,விவசாய தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம்.சிவதாஸ் கூறியது.கடந்த ஆண்டு கஜா புயலில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு, மெய்க்கால் புறம்போக்கு,நெடுஞ்சாலைக்கு இடையூறாக இல்லாமல் குடியிருப்பவா்களுக்கும், கோயில், மடம், நீா்நிலைப் புறம்போக்கு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவா்களுக்கு வகை மாற்றம் செய்து, வீட்டுமனையுடன் அரசு அறிவித்த கஜா புயல் நிவாரண காங்கிரிட் குடியிருப்பு வீடுகள் கட்டித்தரக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆயிரத்து 500 பேரிடம் கையெழுத்து வாங்க தீா்மானிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதற்கட்டமாக, நாகங்குடி, பண்டுதக்குடி, மேல,கீழப்பனங்காட்டாங்குடி,மேல்கொண்டாழி, மரக்கடை, வள்ளுவா் காலனி, அவ்வைக்காலனி, சித்தாத்தங்கரை, கோரையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 750 பேரிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளன. தொடா்ந்து கையெழுத்து வாங்கப்பட உள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com