மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், வியாழக்கிழமை (அக்டோபா் 10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பைங்காநாடு, துளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிக்காடு, இடையா்நத்தம், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.