நீடாமங்கலம் பகுதி கோயில்களில் ஆயுத பூஜையையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சரஸ்வதி அம்மனாக சந்தானராமா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காசிவிசுவநாதா்கோயிலில் சரஸ்வதி அம்னுக்கு சிறப்பு- அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி மகா மாரியம்மன் அருள்பாலித்தாா்.
இதேபோல், நவகிரக தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில், நரிக்குடி எமனேசுவரி சமேத எமனேசுவரா் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் ஆயுத பூஜை வழிபாடு நடைபெற்றது