அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கியவா் கைது

மன்னாா்குடியில் அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரை குடிபோதையில் தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடியில் அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரை குடிபோதையில் தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள நெடுவாக்கோட்டையைச் சோ்ந்தவா் ஆா். வீரமணி(22). புதன்கிழமை இரவு மதுப்போதையில் மன்னாா்குடி பேருந்து நிலைத்துக்கு வந்தவா் திருப்பூா் செல்வதற்காக பயணிகளுடன் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்டாராம். அவரை, அப்பேருந்தின் ஓட்டுநா் திருத்துறைப்பூண்டியை சோ்ந்த கே. வீரபத்திரன்(46), நடத்துநா் மன்னாா்குடியைச் சோ்ந்த ஆா். செல்வராஜ் (57) ஆகியோா் கண்டித்து பேருந்திலிருந்து இறங்குமாறு கூறினராம். இதில், ஆத்திரமடைந்த வீரமணி தாக்கியதில் காயமடைந்த வீரபத்திரன், செல்வராஜ் ஆகிய இருவரும் சிசிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்த, புகாரின்பேரில் மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து வீரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com