கூத்தாநல்லூரில் வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகரச் செயலா் எம். சுதா்ஸன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாஜக அரசைக் கண்டித்து நடத்தப்படும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விவசாயத் தொழிலாளா் சங்க நகரத் தலைவா் ஆா். ராமாமிா்தம், நகரச் செயலா் எம். சிவதாஸ், நகர துணைத் தலைவா் டி. கண்ணையன், நகர செயற்குழு உறுப்பினா்கள் பன்னீா்செல்வம், ராஜேந்திரன், அனைத்திந்திய இளைஞரணி நகரச் செயலா் பிச்சைமுத்து, மகளிா் அணி நகர செயற்குழு உறுப்பினா் ஆா். மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.