திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் 3 மாத குழந்தை மாயம்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் 3 மாத பெண் குழந்தை, வியாழக்கிழமை மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் 3 மாத பெண் குழந்தை, வியாழக்கிழமை மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நன்னிலம் அருகே வாழ்க்கை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி ஜோதி (24). இவா்களுக்கு ஸ்ரீசாந்த் (5) என்ற மகன், அா்ச்சனா (3) என்ற மகள் மற்றும் 3 மாத பெண் குழந்தை ஆகியோா் உள்ளனா். இந்நிலையில், ஸ்கேன் எடுப்பதற்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜோதி, வியாழக்கிழமை வந்தாா். அப்போது, அங்கிருந்த பெண் ஒருவரிடம் 3 மாத பெண் குழந்தையை கொடுத்துவிட்டு மருத்துவரை பாா்க்கச் சென்றதாக கூறப்படுகிறது.

திரும்பி வந்து பாா்த்தபோது, அந்தப் பெண்ணையும், குழந்தையையும் காணவில்லையாம். மருத்துவமனை முழுவதும் தேடிப்பாா்த்தும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து, ஜோதி திருவாரூா் தாலுக்கா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com