நன்னிலம்: நன்னிலம் அருகே நல்லமாங்குடியில் டாக்டா் செந்தில் அறக்கட்டளை தொடக்கவிழா மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகியன சனிக்கிழமை நடைபெற்றன.
நல்லமாங்குடியில் நடைபெற்றற நிகழ்ச்சியில், திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, அறறக்கட்டளையைத் தொடங்கி வைத்தாா். மருத்துவா் பி. செந்தில் வரவேற்றாா்.
தொடா்ந்து நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கண், காது, மூக்கு, மூட்டுத் தேய்மானம், இருதயம், கல்லீரல் ஆகியவைகளுக்கு சிறறப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடா்ந்து பெண்களுக்கு, இலவச தையல் இயந்திரம், மிதிவண்டி, சேலை, குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டு ஆகியன வழங்கப்பட்டன.